Ennai mudal mudalaga paarkum podu
என்னை முதன் முதலாக பார்த்த போது
Movie: Poompuhar
Year: 1964
Music Directors:
Lyricist: M.Karunanidhi
Singers: S. Janaki | T.M. Soundararajan (TMS)
ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
பெண் : நான் உன்னை நினைத்தேன்
ஆண் : என் கைகள் உன் மேல் பட்ட போது
என்ன உணர்ந்தாய்
பெண் : நான் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்
ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
பெண் : நான் உன்னை நினைத்தேன்
ஆண் : கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
பெண் : ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது
ஆண் : இதழும் இதழும் நெருங்கும் போது
சுகம் தெரிந்ததா
பெண் : இல்லை சொர்க்கம் தெரிந்தது
சொர்க்கம் தெரிந்தது
ஆண் : ஆஹா
பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
ஆண் : நான் உன்னை நினைத்தேன்
பெண் : காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே
ஆண் : குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே
பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
பெண் : உன்னை நினைத்தேன்
ஆண் : நான் உன்னை நினைத்தேன்
Trivia:
