Naan Pesa Ninaippathellam
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Kannadasan
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
பெண் : { நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் } (2)
ஆண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும் நீ காண
வேண்டும்
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : நீ காணும்
பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் & பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : பாலோடு
பழம் யாவும்
{ உனக்காக வேண்டும் } (2)
பெண் : பாவை உன்
முகம் பார்த்து
{ பசியாற வேண்டும் } (2)
பெண் : மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும்
பெண் : மடி மீது
விளையாடும்
சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
ஆண் : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
பெண் : சொல் என்றும்
மொழி என்றும் பொருள்
என்றும் இல்லை பொருள்
என்றும் இல்லை
பெண் : சொல்லாத
சொல்லுக்கு விலை
ஏதும் இல்லை விலை
ஏதும் இல்லை
பெண் : ஒன்றோடு
ஒன்றாக உயிர் சேர்ந்த
பின்னே உயிர் சேர்ந்த
பின்னே
பெண் : உலகங்கள்
நமையன்றி வேறேதும்
இல்லை வேறேதும்
இல்லை
பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
Trivia:
