Odum megangale oru sol keleero
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
Year: 1965
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Vaali
Singers: T.M. Soundararajan (TMS)
ஆண் : { ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ } (2)
{ ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ } (2)
ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆண் : { நாடாளும் வண்ண
மயில் காவியத்தில் நான்
தலைவன் நாட்டிலுள்ள
அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன் } (2)
ஆண் : மாளிகையே
அவள் வீடு மரக்கிளையில்
என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
{ ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ } (2)
ஆண் : { ஊரெல்லாம்
தூங்கையிலே
விழித்திருக்கும் என்
இரவு உலகமெல்லாம்
சிரிக்கையிலே அழுதிருக்கும்
அந்த நிலவு } (2)
ஆண் : பாதையிலே
வெகு தூரம் பயணம்
போகின்ற நேரம் காதலை
யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு
ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
Trivia:
