Kathiruppan Kamala Kannan

காத்திருப்பான் கமலக் கண்ணன்

Year: 1958

Music Directors: G. Ramanathan

Singers: P. Leela

தமிழ்
English

பெண் : காத்திருப்பான் கமலக் கண்ணன்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்
அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண் : ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென் மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண் : கோபியர் கொஞ்சும் சல்லாபன்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேய்ங் குழலிசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேய்ங் குழலிசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்

பெண் : தாவிப் பிடிப்பான்…..
ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…..ஆ….
தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான்
தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை
உருவம் வரைந்து கொண்டு அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்……….

பெண் : வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணை இசைக்கச் சொல்லி
வேண்டுவான் சிலநேரம்
வீணை இசைக்கச் சொல்லி
வேண்டுவான் சிலநேரம்

பெண் : வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
பாடுவான்…….ஆ……
அதற்கவள் ஆடுவாள்…..ஆ……ஆ…..

பெண் : பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
மறு நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் வந்து

பெண் : காத்திருப்பான் கமலக் கண்ணன்…….
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

Share this song