Saravana poigayil Neeraadi
சரவணப் பொய்கையில் நீராடி
Movie: Idhu Sathiyam | இது சத்தியம்
Year:
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Kannadasan
Singers: P. Susheela
பெண் : ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
பெண் : அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ….
ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ….
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
பெண் : நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
பெண் : சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
Trivia:
